முடி உதிர்வதை தடுக்க இயற்கை முறையில் மருந்து தயாரிப்பது எப்படி?

தேவையான பொருள்

டீ தூள்1 1/2 தேக்கரண்டி
இன்டிகோ பொடி3 தேக்கரண்டி
நெல்லிக்காய் பொடி1 தேக்கரண்டி
மருதாணி பொடி2 தேக்கரண்டி
தண்ணீர்150 மி.லி
நீலகிரி தைலம்5 மி.லி

செய்முறை

  •  முதலில் கொடுக்கப்பட்டுள்ள பொருட்களின் சரியான அளவை எடுத்துக்கொள்ளவும்.
  • பிறகு ஒரு பாத்திரத்தில் 150 மி.லி தண்ணீரை எடுத்துக்கொண்டு மிதமான சூட்டில் சூடுபடுத்த வேண்டும்.
  • பிறகு இதனை வடிகட்டி வேறு ஒரு பாத்திரத்தில் எடுத்துக்கொள்ளவும்.
  • பிறகு ஒரு பாத்திரத்தில் இன்டிகோ பொடி,நெல்லிக்காய் பொடி மற்றும் மருதாணி பொடி ஆகிய மூன்று பொருட்களையும் சேர்த்துக்கொண்டு நன்கு கலக்க வேண்டும்.
  • பிறகு இதனுடன் வடிகட்டிய தேநீர் சேர்த்துக்கொண்டு பசை தன்மை அடையும் வரை கலக்க வேண்டும்.
  • மேலும் இதனுடன் நீலகிரி தைலம் 4 அல்லது 5 துளி சேர்த்துக்கொள்ளவும்.
  • இதனை பருத்தி ஆடையால் நன்கு முடி 2 மணி நேரம் உலர வைக்க வேண்டும்.
  • பிறகு இதனை தலையில் தடவி 2 மணி நேரம் உலர வைத்து விட்டு சாதாரண நீரில் குளித்து வந்தால் நரை முடி நீங்கி அடர்த்தி தன்மையை பெறும்.
  • மேலும் முடி உதிர்வை முற்றிலுமாக குறைக்க முடியும்.
இன்டிகோ பொடி
நெல்லிக்காய் பொடி
நீலகிரி தைலம்
மருதாணி பொடி
டீ தூள்