ஒரு சரியான மூலிகை தேநீர் செய்வது எப்படி September 25, 2020September 25, 2020 by admin தேவையான பொருள் தண்ணீர் 250 மி.லி பெருஞ்சிரகம் 5 கிராம் ஏலக்காய் 2 எண்ணிக்கை இலவங்க பட்டை பொடி சிறிதளவு இஞ்சி சிறிய துண்டு புதினா இலை சிறிதளவு லெமன் கிராஸ் இலை சிறிதளவு பனை வெல்லம் சிறிதளவு Find Where To Buy These Items செய்முறை முதலில் கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை சரியான அளவில் எடுத்துக்கொள்ளவும்.பிறகு ஒரு பாத்திரத்தில் 250 மி.லி தண்ணீரை சேர்த்துக்கொண்டு மிதமாக சூடுபடுத்தவும்.பெருஞ்சிரகம்,ஏலக்காய்,இஞ்சி ஆகிய மூன்று பொருட்களையும் நன்கு இடித்து தண்ணீர் உடன் சேர்த்துக்கொள்ளவும்.மேலும் தண்ணீர் உடன் இலவங்க பட்டை பொடி, லெமன் கிராஸ் இலை,புதினா இலை மற்றும் பனை வெல்லம் ஆகிய பொருட்களை சேர்த்துக்கொள்ளவும்.மேலும் நீரை பாதியளவு ஆகும் வரை நன்கு கொதிக்க விடவும்.பிறகு நீரை வடிகட்டி வேறு ஒரு பாத்திரத்தில் எடுத்துக்கொள்ளவும்.இப்போது சுவையான மூலிகை தேநீர் தயார் ஆகிவிடும்.இதனை தொடர்ந்து காலை நேரங்களில் குடித்து வந்தால் உடல் புத்துணர்ச்சி பெறும். ஏலக்காய் இலவங்க பட்டை பொடி பெருஞ்சிரகம் தண்ணீர் புதினா இலை இஞ்சி லெமன் கிராஸ் இலை பனை வெல்லம் நண்பர்களுக்கு பகிரவும்