சளி மற்றும் காய்ச்சல் இருந்து விடுபடுவதற்க்கு உதவும் மூலிகை தேநீர்

தேவையான பொருள்

சுக்கு 20 கிராம்
கொத்தமல்லி 20 கிராம்
இஞ்சி 30 கிராம்
திப்பிலி 5 கிராம்
புதினா இலை ஒரு கைப்புடி அளவு
மிளகு 5 கிராம்
பனை வெல்லம் 200 கிராம்
தண்ணீர் 1 லிட்டர்

செய்முறை

  •  முதலில் கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை சரியான அளவில் எடுத்துக்கொள்ள வேண்டும்.
  • பிறகு கொத்தமல்லியை  ஒரு பாத்திரத்தில் எடுத்துக்கொண்டு மிதமான சூட்டில் நன்கு பொன்னிறமாக வறுத்து பொடியாக்கி கொள்ளவும்.
  • மேலும் சுக்கு,இஞ்சி,திப்பிலி,புதினா இலை,மிளகு மற்றும் பனை வெல்லம் ஆகிய பொருட்களையும் சிறிது இடித்துக்கொள்ளவும்.
  • பிறகு 100 மி.லி தண்ணீரை ஒரு பாத்திரத்தில் எடுத்துக்கொண்டு மிதமான சூட்டில் சூடுபடுத்தவும்.
  • மேலும் நீருடன் அரைத்த கொத்தமல்லி பொடி மற்றும் இடித்த பொருட்களை சேர்த்துக்கொண்டு 15 நிமிடம் கொதிக்க வைக்கவும்.
  • பிறகு வடிகட்டி வேறு ஒரு பாத்திரத்தில் எடுத்துக்கொள்ளவும்.
  • இப்போது சுவையான மூலிகை தேநீர் தயார் ஆகிவிடும்.