சுவாசத்தில் ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்க உதவும் மூலிகை தேநீர் May 14, 2021September 2, 2020 by admin தேவையான பொருள் ஓமம் 100 கிராம் சோம்பு 50 கிராம் சுக்கு 10 கிராம் ஏலக்காய் 10 கிராம் கிராம்பு 5 கிராம் இலவங்கப்பட்டை 5 கிராம் பால் 100 மி.லி தண்ணீர் 100 மி.லி தேயிலை இரண்டு தேக்கரண்டி நாட்டு சர்க்கரை தேவையான அளவு Find Where To Buy These Items செய்முறை முதலில் கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை சரியான அளவில் எடுத்திக்கொள்ளவும்.பிறகு சுக்கு மற்றும் ஓமம் ஆகிய இரண்டு பொருட்களையும் தவிர மீதமுள்ள பொருட்களை மிதமான சூட்டில் வறுக்கவும்.பிறகு சுக்கு மற்றும் ஓமம் ஆகிய இரண்டு பொருட்களையும் வறுத்துக்கொள்ளவும்.வறுத்த பொருட்களை நன்கு அரைத்து பொடியாக்கி ஒரு கண்ணாடி புட்டியில் சேகரித்துக்கொள்ளவும்.பிறகு ஒரு பாத்திரத்தில் 100 மி.லி பால் மற்றும் தண்ணீர் சேர்த்து மிதமாக சூடுபடுத்தவும்.மேலும் இதனுடன் இரண்டு தேக்கரண்டி தேயிலை சேர்த்துக்கொள்ளவும்.பிறகு ஒருதேக்கரண்டி அரைத்த பொடியை சேர்த்துக்கொண்டு நன்கு கொதிக்க விடவும். மேலும் இதனுடன் நாட்டு சர்க்கரை சேர்த்துக்கொள்ளவும்.பிறகு தேநீரை வடிகட்டி எடுத்துக்கொள்ளவும்.இந்த தேநீரை தொடர்ந்து காலை மற்றும் மாலை ஆகிய இரண்டு வேளைகள் குடித்து வந்தால் சுவாசத்தில் ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்க முடியும். சுக்கு தண்ணீர் ஓமம் கிராம்பு ஏலக்காய் நாட்டு சர்க்கரை தேயிலை இலவங்கப்பட்டை சோம்பு நண்பர்களுக்கு பகிரவும்