இரத்த அழுத்தம் உள்ளவர்களுக்கு அருமருந்தாக விளங்கும் ஆவாரம் பூ தேநீர் June 30, 2021 | No Comments Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp தேவையான பொருள் ஆவாரம்பூ பொடி 2 டீஸ்பூன் இஞ்சி சிறு துண்டு இலவங்கபட்டை சிறு துண்டு தேன் அல்லது நாட்டுசர்க்கரை தேவையான அளவு ஏலத்தூள் 2 சிட்டிகை மிளகுத்தூள் 2 சிட்டிகை Find Where To Buy These Items செய்முறை முதலில் கொடுக்கப்பட்டு உள்ள பொருட்களின் சரியான அளவை எடுத்துக்கொள்ளவும். பிறகு ஆவாரம் பூவை 5 இருந்து 7 நாட்கள் காய வைத்து அரைத்து பொடியாக்கி ஒரு பாத்திரத்தில் சேகரித்து கொள்ளவும். ஒன்றரை டம்ளர் தண்ணீரில் ஆவாரம்பூ பொடியையும் இலவங்கபட்டையையும் சேர்த்து கொதிக்க வைத்து கொள்ளவும். மேலும் இதனுடன் இஞ்சியை இடித்து போடவும். நீர் கொதித்ததும் வடிகட்டி வேறு ஒரு பாத்திரத்தில் எடுத்துக்கொள்ளவும். பிறகு தேவையான அளவு தேன் அல்லது நாட்டுச்சர்க்கரை கலந்து குடிக்கவும். இதை தொடர்ந்து குடித்து வந்தால் இரத்த அழுத்தம் உள்ளவர்களுக்கு அருமருந்தாக இது விளங்கும். நன்மை ஆவாரம் பூ உடலில் இன்சுலின் சுரப்பை ஊக்குவிக்கிறது என்பதால் நீரிழிவு நோயாளிகளுக்கு சிறந்த பானமாக உதவும். உடல் சோர்வை விரட்டி அடிக்கும். கோடையில் உண்டாகும் நீர்கடுப்பு, குடற்புண், சிறுநீரக குறைபாடு போன்றவற்றை நீக்கும். மலச்சிக்கல் பிரச்சனை வராமல் பாதுகாக்கும். ஆவாரம்பூ பொடி தேன் ஏலக்காய் தூள் மிளகுத்தூள் இஞ்சி இலவங்கபட்டை Related posts:தொப்பை உள்ளவர்களுக்கு ஒரு அற்புதமான வீட்டு வைத்தியம்கடுமையான தோள்பட்டை வலி நீங்க உதவும் வீட்டு வைத்தியம்குடற்புழுக்களை நீக்க ஒரு எளிதான இயற்கை மருத்துவம்வைரஸ் நோய் எதிரான ஒரு எளிமையான கசாயம் தயாரிக்கும் முறை