இரத்த அழுத்தம் உள்ளவர்களுக்கு அருமருந்தாக விளங்கும் ஆவாரம் பூ தேநீர்

தேவையான பொருள்

ஆவாரம்பூ பொடி 2 டீஸ்பூன்
இஞ்சி சிறு துண்டு
இலவங்கபட்டை சிறு துண்டு
தேன் அல்லது நாட்டுசர்க்கரை தேவையான அளவு
ஏலத்தூள் 2 சிட்டிகை
மிளகுத்தூள் 2 சிட்டிகை

செய்முறை

    • முதலில் கொடுக்கப்பட்டு உள்ள பொருட்களின் சரியான அளவை எடுத்துக்கொள்ளவும்.
    • பிறகு ஆவாரம் பூவை 5 இருந்து 7 நாட்கள் காய வைத்து அரைத்து பொடியாக்கி ஒரு பாத்திரத்தில் சேகரித்து கொள்ளவும்.
    • ஒன்றரை டம்ளர் தண்ணீரில் ஆவாரம்பூ பொடியையும் இலவங்கபட்டையையும் சேர்த்து கொதிக்க வைத்து கொள்ளவும்.
    •  மேலும் இதனுடன் இஞ்சியை இடித்து போடவும்.
    • நீர் கொதித்ததும் வடிகட்டி வேறு ஒரு பாத்திரத்தில் எடுத்துக்கொள்ளவும்.
    • பிறகு தேவையான அளவு தேன் அல்லது நாட்டுச்சர்க்கரை கலந்து குடிக்கவும்.
    • இதை தொடர்ந்து குடித்து வந்தால் இரத்த அழுத்தம் உள்ளவர்களுக்கு அருமருந்தாக இது விளங்கும்.
நன்மை
  • ஆவாரம் பூ உடலில் இன்சுலின் சுரப்பை ஊக்குவிக்கிறது என்பதால் நீரிழிவு நோயாளிகளுக்கு சிறந்த பானமாக உதவும். 
  • உடல் சோர்வை விரட்டி அடிக்கும். 
  • கோடையில் உண்டாகும் நீர்கடுப்பு, குடற்புண், சிறுநீரக குறைபாடு போன்றவற்றை நீக்கும். 
  • மலச்சிக்கல் பிரச்சனை வராமல் பாதுகாக்கும். 
 
ஆவாரம்பூ பொடி
தேன்
ஏலக்காய் தூள்
மிளகுத்தூள்
இஞ்சி
இலவங்கபட்டை