தேவையான பொருள்
சுக்கு | 30 கிராம் |
கொத்தமல்லி | 10 கிராம் |
மிளகு | 15 கிராம் |
சீரகம் | 15 கிராம் |
பனங்கற்கண்டு | தேவையான அளவு |
தண்ணீர் | 300 மி.லி |
செய்முறை
- முதலில் கொடுக்கபட்டுள்ள பொருட்களை சரியான அளவில் எடுத்துக்கொள்ளவும்.
- பிறகு மல்லி, மிளகு மற்றும் சீரகம் ஆகிய மூன்று பொருட்களையும் தனிதனியே நன்கு பொன்னிறமாக வறுத்துக்கொள்ளவும்.
- மேலும் வறுத்த பொருட்களை ஒன்றாக சேர்த்து அரைத்துக்கொள்ளவும்.
- பிறகு 300 மி.லி தண்ணீரை ஒரு பாத்திரத்தில் எடுத்துக்கொள்ளவும்.
- பிறகு தண்ணீரை மிதமான சூட்டில் சூடுபடுத்தவும்.மேலும் தண்ணீருடன் இடித்த பொருட்களையும் சேர்க்கவும்.
- மேலும் இதனுடன் இடித்த சுக்கு மற்றும் பனங்கற்கண்டு சேர்த்துக்கொண்டு நீரை நன்கு கொதிக்க விடவும்.
- பிறகு நீரை வடிகட்டி வேறு ஒரு பாத்திரத்தில் எடுத்துக்கொள்ளவும்.
- இப்போது அருமையான தேநீர் தயார்.
- இதனை தொடர்ந்து குடித்து வந்தால் வாயு பிரச்சனை குணமாகும்.