ஆழ்ந்த தூக்கம் வருவதற்கான ஒரு எளிய மருத்துவம்

தேவையான பொருள்

மருதம் பட்டை பொடி 5 கிராம்
சீரகம் பொடி 5 கிராம்
தண்ணீர் 200 மி.லி

செய்முறை

  •  முதலில் கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை சரியான அளவில் எடுத்துக்கொள்ளவும்.
  • பிறகு 200 மி.லி தண்ணீரை ஒரு பாத்திரத்தில் எடுத்துக்கொண்டு மிதமாக சூடுபடுத்தவும்.
  • மேலும் இந்த நீருடன் மருதம் பட்டை பொடி மற்றும் சீரகம் பொடி ஆகிய இரண்டு பொருட்களையும் சமஅளவு சேர்த்துக்கொள்ளவும்.
  • மேலும் இந்த நீரை 100 மி.லி வரும் வரை கொதிக்க விடவும்.
  • பிறகு இந்த நீரை வடிகட்டி வேறு ஒரு பாத்திரத்தில் எடுத்துக்கொள்ளவும்.
  • இந்த நீரை தூங்குவதற்கு இரண்டு மணி நேரத்திற்கு முன் குடித்து வந்தால் ஆழ்ந்த தூக்கம் வரும்.
  • மேலும் இந்த மருந்து எந்த வித பக்கவிளைவையும் ஏற்படுத்தாது.

இந்த நீரை குடிப்பதால் கிடைக்கும் பயன்கள்:

1) மனஅழுத்ததில் இருந்து விடுபட முடியும்.

2)இதயத்தில் ஏற்படும் அடைப்பை நீக்கும்.

3)தேவையற்ற கொழுப்பை எளிதில் கரைக்கும்.