தேவையான பொருள்
| பூண்டு(பற்கள்) | 5 எண்ணிக்கை | 
| பால் | 200 மி.லி | 
| மிளகு தூள் | சிறிதளவு | 
| மஞ்சள் தூள் | சிறிதளவு | 
| தேன் | தேவையான அளவு | 
| உலர் திராட்சை | 10 எண்ணிக்கை | 
செய்முறை
- முதலில் கொடுக்கப்பட்டுள்ள பொருட்களின் சரியான அளவை எடுத்துக்கொள்ளவும்.
- பிறகு 200 மி.லி பாலை ஒரு பாத்திரத்தில் எடுத்துக்கொண்டு மிதமான சூட்டில் சூடுபடுத்தவும்.
- மேலும் இதனுடன் இடித்த பூண்டையும் சேர்த்துக்கொண்டு நன்கு வேக வைக்கவும்.
- பிறகு இதனுடன் சிறிதளவு மஞ்சள்தூள் மற்றும் மிளகுதூள் சேர்த்துக்கொண்டு 5 நிமிடம் கொதிக்க விட வேண்டும்.
- பிறகு இதனை வேறு ஒரு பாத்திரத்தில் எடுத்துக்கொள்ளவும்.
- மேலும் இதனுடன் தேன் சேர்த்து நன்கு கலக்கவும்.
- பிறகு இதனுடன் உலர் திராட்சை சேர்த்துக்கொள்ளவும்.
- இப்போது ஒரு சுவையான பானம் தயார் ஆகிவிடும்.
- இதனை முதுகு வலி உள்ளவர்கள் தொடர்ந்து 48 நாட்கள் காலை மற்றும் இரவு குடித்து வந்தால் முதுகு வலி நீங்கி முதுகு தண்டு வலிமை பெறும்.


 
								 
								 
								 
								 
								 
								