நாள் முழுவதும் புத்துணர்ச்சியாகவும், குளிர்ச்சியாகவும் இருக்க!

தேவையான பொருள்

வெந்தையம் 20 கிராம்
தண்ணீர் 200 மி.லி

செய்முறை

  • முதலில் கொடுக்கப்பட்டுள்ள பொருட்களின் சரியான அளவை எடுத்துக்கொள்ளவும்.
  • பிறகு வெந்தயத்தை 200 மி.லி தண்ணீரில் இரவு முழுவதும் ஊற வைக்க வேண்டும்.
  • மேலும் ஊற வைத்த வெந்தயத்தை வழவழப்பாக நன்கு அரைத்து எடுத்துக்கொள்ளவும்.
  • இதை விரல் நுனிகளால் தலையில் தேய்த்து அரைமணி நேரம் கழித்து குளித்து வந்தால் நாள் முழுவதும் புத்துணர்ச்சியாகவும், குளிர்ச்சியாகவும் இருக்க முடியும்.
  • மேலும் இது உடலின் சுறுசுறுப்பை நன்கு அதிகரிக்க கூடியது ஆகும்.