வைரஸ் நோய்க்கு மூலிகை தேநீர் தயாரிக்கும் முறை

தேவையான பொருள்

சுக்கு 20 கிராம்
மிளகு 20 கிராம்
திப்பிலி 20 கிராம்
கடுக்காய் 1
மஞ்சள் பொடி சிறிதளவு
ஏலக்காய் 2 எண்ணிக்கை
சித்தரத்தை 20 கிராம்
அதிமதுரம் 20 கிராம்
கிராம்பு 20 கிராம்
ஓமம் 20 கிராம்
தண்ணீர் 300 மி.லி

செய்முறை

  • முதலில் கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை சரியான அளவில் எடுத்துக்கொள்ளவும்.
  • பிறகு மஞ்சள் பொடி மற்றும் தண்ணீர் தவிர மீதமுள்ள பொருட்களை சிறிது வறுத்துக்கொள்ளவும்.
  • வறுத்த பொருட்களை இடித்து பொடியாக்கி கொள்ளவும்.
  • மேலும் இதனுடன் சிறிதளவு மஞ்சள் பொடி சேர்த்துக்கொண்டு ஒரு கண்ணாடி புட்டியில் சேகரித்துக்கொள்ளவும்.
  • பிறகு 300 மி.லி தண்ணீரை ஒரு பாத்திரத்தில் எடுத்துக்கொண்டு மிதமான சூட்டில் சூடுபடுத்தவும்.
  • மேலும் இந்த நீருடன் ஒரு தேக்கரண்டி அரைத்த பொடியை சேர்த்துக்கொள்ளவும்.
  • மேலும் தண்ணீர் 100 மி.லி வரும்வரை கொதிக்க விடவும்.
  • பிறகு இதனை வடிகட்டி வேறு ஒரு பாத்திரத்தில் எடுத்துக்கொள்ளவும்.
  • இப்போது மூலிகை தேநீர் தயார் ஆகிவிடும்.
  • இதனை தொடர்ந்து மூன்று வேளைகள் குடித்து வந்தால் வைரஸ் நோய் முற்றிலுமாக குணமாகும்.