சிரங்கு நோய் மற்றும் தோல் நோய்களை குணமாக்க உதவும் தைலம் August 10, 2020 | No Comments தேவையான பொருள் முருங்கை மரம் பட்டை 100 கிராம் குப்பைமேனி இலை சாறு 50 மி.லி விளக்கு எண்ணெய் 100 மி.லி Find Where To Buy These Items செய்முறை முதலில் கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை சரியான அளவில் எடுத்துக்கொள்ளவும்.பிறகு முருங்கை மரம் பட்டையை நன்கு இடித்து சிறிதளவு தண்ணீர் விட்டு அரைத்து அதன் சாற்றை மட்டும் தனியாக எடுத்துக்கொள்ளவும்.இதை போலவே குப்பைமேனி இலையையும் அரைத்து அதன் சாற்றை மட்டும் தனியாக எடுத்துக்கொள்ளவும்.பிறகு ஒரு பாத்திரத்தில் 100 மி.லி விளக்கு எண்ணெய் மிதமான சூட்டில் சூடுபடுத்தவும் .மேலும் விளக்கு எண்ணெய்யுடன் முருங்கை மரம் பட்டை சாறு சேர்த்து 5 நிமிடம் கொதிக்க வைக்கவும்.அடுத்து குப்பைமேனி இலை சாறு சேர்த்து தைலமாக மாறும் வரை கொதிக்க வைக்கவும்.பிறகு இந்த தைலத்தை வடிகட்டி வேறு ஒரு பாத்திரத்தில் எடுத்துக்கொள்ளவும்.இரவு நேரங்களில் தோல் நோய் உள்ள இடங்களில் தடவி காலையில் குளித்து வந்தால் தோல் நோய் முற்றிலுமாக நீங்கும். விளக்கு எண்ணெய் Related posts:குளிர் காலத்தில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க ஒரு எளிதான வழிஅஜீரணம் சரியாகபெண்கள் கருப்பை வலுப்படும்துளசி செடி இருந்தால் போதும் இனி காய்ச்சலை கண்டு பயப்பட தேவை இல்லை