உடலை வலிமையாக வைத்திருக்க உதவும் கொத்தமல்லி தேநீர் June 30, 2021June 30, 2021 by admin தேவையான பொருள் கொத்துமல்லி விதை1 டீஸ்பூன்சுக்கு பொடிதேவையான அளவுநாட்டுச் சர்க்கரைதேவையான அளவு Find Where To Buy These Items செய்முறை முதலில் கொடுக்கப்பட்டுள்ள பொருட்களின் சரியான அளவை எடுத்துக்கொள்ளவும்.கொத்துமல்லி விதைகளை 8 மணி நேரம் ஊற வைத்து கொள்ளுங்கள்.பிறகு ஊற வைத்த கொத்துமல்லி விதை மற்றும் அதே தண்ணீரை ஒரு பாத்திரத்தில் எடுத்துக்கொண்டு மிதமாக சூடுபடுத்தவும்.மேலும் இதனுடன் தேவையான அளவு சுக்கு சேர்த்துக்கொள்ள வேண்டும்.பிறகு இதை வடிகட்டி எடுத்துக்கொள்ளவும்.இந்த தேநீரின் சுவையை மேலும் அதிகரிக்க தேன் அல்லது நாட்டுச்சர்க்கரை சேர்த்து குடிக்க வேண்டும்.இந்த தேநீரை குழந்தைகளும் குடிக்கலாம்.நன்மை: உடலில் இருக்கும் வாயுவை வெளியேற்றுகிறது. ஒற்றைத்தலைவலி தீவிரம் குறைக்கும். இரத்த அழுத்தம், நீரீழிவு, பித்தம் போன்றவற்றை கட்டுக்குள் வைக்க உதவுகிறது. பெண்களுக்கு மாதவிடாய் ஹார்மோனை சீராக வைக்க உதவுகிறது. சைனஸ், சளி தொந்தரவுகளிலிருந்தும் காக்கிறது. சுக்கு பொடி கொத்துமல்லி விதை நாட்டுச் சர்க்கரை நண்பர்களுக்கு பகிரவும்