நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் துளசி பானம்

தேவையான பொருள்

தண்ணீர் 300 மி.லி
மஞ்சள் தூள் சிறிதளவு
இஞ்சி சிறிய துண்டு
மிளகு 7 எண்ணிக்கை
துளசி இலை ஒரு கைப்புடி அளவு

செய்முறை

  •  முதலில் கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை சரியான அளவில் எடுத்துக்கொள்ளவும்.
  • பிறகு 300 மி.லி நீரை ஒரு பாத்திரத்தில் எடுத்துக்கொண்டு மிதமான சூட்டில் சூடுபடுத்தவும்.
  • பிறகு இஞ்சி மற்றும் மிளகு சிறிது இடித்து கொள்ளவும்.
  • மேலும் நீருடன் துளசி இலை சிறிதளவு மஞ்சள் தூள்,இடித்த இஞ்சி மற்றும் மிளகு சேர்த்துக்கொண்டு 10 நிமிடங்கள் சூடுபடுத்தவும்.
  • பிறகு நீரை வடிகட்டி வேறு ஒரு பாத்திரத்தில் எடுத்துக்கொள்ளவும்.
  • இந்த நீரை தொடர்ந்து இரண்டு வேளை உணவிற்கு முன் குடித்து வந்தால் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.
  • பெரியவர்கள் 250 மி.லி  மற்றும் சிறியவர்கள் 100 மி.லி குடிக்கலாம்.