வழுக்கை தலையில் முடி வளர ஒரு எளிதான இயற்கை மருத்துவம்

தேவையான பொருள்

கடுகு எண்ணெய் 200 மி.லி
மருதாணி இலை ஒரு கைப்புடி அளவு

செய்முறை

    •  முதலில் கொடுக்கப்பட்டுள்ள பொருட்களின் சரியான அளவை எடுத்துக்கொள்ளவும்.
    • பிறகு ஒரு பாத்திரத்தில் 200 மி.லி  கடுகு எண்ணெயை எடுத்துக்கொண்டு மிதமான சூட்டில் சூடுபடுத்தவும்.
    • பிறகு இதனுடன் ஒரு கைப்புடி அளவு  மருதாணி இலைகளை சேர்த்துக்கொண்டு நன்கு கொதிக்க விடவும்.
    • பிறகு இந்த எண்ணெய்யை 20 நிமிடம் குளிர விட்டு, வடிகட்டி ஒரு பாத்திரத்தில் சேகரித்துக்கொள்ளவும்.
    • இந்த எண்ணெய்யை தினமும் தலையில் தடவி வந்தால், சில வாரங்களில் சொட்டையான இடத்தில் முடியின் வளர்ச்சியைக்யைக் காணலாம்.

மற்றோரு வழிமுறை

  • வெங்காயத்தை நன்கு பசை தன்மை போன்று அரைத்து தலையில் தடவி சிறிது நேரம் கழித்து அவ்விடத்தில் தேனை தடவ வேண்டும். 
  • இப்படி அடிக்கடி செய்தால்,இரத்த ஓட்டம் அதிகரித்து  முடியின் வளர்ச்சி பெறும்.
கடுகு எண்ணெய்
மருதாணி இலை