பிரண்டையை முருங்கைக்காய் துண்டு நீளத்தில் நறுக்கி, லேசாகச் சீவிக் கொள்ளவும்.
கையில் எண்ணெய் தடவிக்கொண்டு நன்றாகக் கழுவவும். வாணலியில் எண்ணெய்விட்டுச் சூடாக்கி, கடுகு, பெருங்காயத்தூள் தாளிக்கவும்.
இதனுடன் பிரண்டையைச் சேர்த்து நன்றாக வதக்கவும்.
பிறகு தேங்காய்த் துருவல், பச்சை மிளகாய், பூண்டு, கறிவேப்பிலை சேர்த்து வதக்கி இறக்கவும்.
ஆறிய பின் புளி, உப்பு சேர்த்துத் தண்ணீர் தெளித்து மிக்ஸியில் துவையலாக அரைத்து எடுக்கவும்.